புதன், 12 ஆகஸ்ட், 2009
நமக்கெதுக்கு வம்பு
எழுத்தாளர் சாருநிவேதிதா இரவு மூன்று மணிவரையில் பேய் மாதிரி உட்கார்ந்து வலைத்தளத்திற்கு எழுதுகிறாராம். அவரைப் படிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் எழுதுகிறார். நீ எதற்கு மூன்று மணிக்கு எழுந்து து£க்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் நரேன். அதுவும் உண்மைதான். ஆனால் எனது எழுத்துக்களை யாரையாவது எப்படி படிக்க வைப்பது? என்று கேட்டேன்.உனது எழுத்துக்களை யாரவாது ஏன் படிக்க வேண்டும்? அவர்கள் அதை படிக்க வேண்டும் என்று என்ன அவசியம் வந்தது?சிவாவின் எழுத்துக்களை படிக்காவிட்டால் உங்களுக்கு நரகம்தான் என்று யாராவது தமிழ்வாசகர்களை பயமுறுத்தியிருக்கிறார்களா?.ஏற்கனவே ஏராளமான எழுத்தாளர்கள் பல்வேறு விதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதில் சிவா தனித்துவமாக என்ன எழுதப்போகிறான்? நரேன் இப்படி சொன்னதை கேட்டதும், நமக்கெதுக்கு வம்பு என்று இருந்தது.............காலையில் எழுந்து குளித்து சூடாக இரண்டு இட்லி தின்றுவிட்டு அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் பயணித்து, அலுவலகத்தில் போய் அமர்ந்து சில வேலைகளை பார்த்து, சக ஊழியர்களுடன் சமீபத்தில் வந்த நாடோடிகள் அல்லது வேறு ஏதாவது ஒரு படத்தை பற்றி பேசிவிட்டு, மாலையில் சில நண்பர்களுடன் ஒயின்ஷாப்பில் அமர்ந்து சில கவிதைகள், இளையராஜாவின் பாடல்கள், ஒரு சில நேரஙகளில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் பற்றி பேசிவிட்டு எப்போது எப்படி போய்ச்சேர்ந்தோம் என்று தெரியாமல் வீடு போய்ச் சேர்ந்து படுத்து, மறுபடி காலையில் எழுந்து குளித்து...............இப்படியாக வாழ்க்கையை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓட்டிக்கொண்டிருப்பதே சாலச்சிறந்தது என்று பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக