செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
யாரும் வரவில்லை
பொதுவாக திருமணம் போன்ற விஷேசங்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள¢ என்று எல்லோரையும் அழைப்போம். நிறையப்பேர் வர வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். கூட்டம் நிறைய வந்தால்தான் அந்த விருந்துக்கு மதிப்பு. அப்படித்தான் வலைமனையை ஆரம்பித்து வைத்து விட்டு யாருமே வரவில்லையே என்று ஏக்கத்தோடு உட்கார்ந்திருக்கிறேன்.கூகுள் தேடல் சாதனம் வழியாக எதையாவது தேடினால் ஏதாவது கிடைக்கிறது. அப்படி தேடிக்கொண்டிருப்பவர்கள் கண்களில் இந்த இணைய தளம் பட்டு விட்டால் நன்றாக இருக்கும். எதையோ தேடிக்கொண்டு போகிறவர்களின் கண்களில் தட்டுப்படவும், தட்டுப்பட்டவுடன் அந்த நபரை கவரவும் ஏதோ சில சூட்சுமங்கள் இருக்கிறது. அது எனக்கு தெரியவில்லை. யாராவது வலைமனை பற்றி நன்கு தெரிந்தவரை விசாரித்தால் தெரியும்.இதை யாராவது பார்க்க நேர்ந்தால், இந்த வலை மனையை வைத்துக்கொண்டு என்னென்ன செய்யலாம் என்ற சாத்தியக்கூறுகளை குறித்து சொல்லுங்களேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக