செவ்வாய், 28 ஜூலை, 2009

வழக்கொழிந்து வரும் வர்ணனையாளர்கள்

வலைத்தளம் ஆரம்பித்து உடனடியாக ஒரு பத்தி எழுதினேன். அதன்பிறகு எழுத நேரம் கிடைக்கவில்லை. மற்றொரு எழுத்து வேலை. நான் தமிழ்வாசல் என்ற பத்திரிகையின் பொறுப்பாசியரியராக இருப்பதால், அந்த பத்திரிகை வேலைகள் எனது நேரத்தை எடுத்துக்கொண்டன. மேலும் தற்போது புத்தகம் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது வலையில் எழுத.தலைப்பை பார்த்ததும், தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் உங்களது நினைவுக்கு வந்தால் அதை அகற்றி விடுங்கள். நான் சொல்ல வந்தது, வர்ணனை மற்றும் அடுக்குமொழி எழுத்தாளர்களைப்பற்றி.சமீபகாலமாக வர்ணனை நடைகள் தமிழ் எழுத்துச்சூழலை விட்டு மறைந்துகொண்டிருப்பது போல தோன்றுகிறது. சொல்ல வருவதை சுருக்கமான வார்த்தைகளில் சொல்வதுதான் நல்ல எழுத்து என்ற பக்குவம் தமிழர்களுக்கு வந்திருக்கிறது. அண்ணா, கலைஞர், வைரமுத்து போன்ற வர்ணனை எழுத்தாளர்கள் தற்போது அந்தக்காலத்து எழுத்தாளர்களாகி விட்டனர்.கவிதையில் வர்ணனை இருக்கட்டும். உரைநடையில் அது வேண்டாம் என்ற முடிவுக்கு வாசகர்கள் வந்து விட்டதை போல தோன்றுகிறது. நாஞ்சில் நாடன், வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துகள் சமீபகாலமாக பிரபலமாகிக்கொண்டிருப்பதில் இருந்தே அது தெரிகிறது.மேலும் நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றிற்கு ஒரு காலத்தில் இருந்த மதிப்பு தற்போது இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களில் கவிதை, கதை போன்ற புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தலைவர்களின் சரித்திரங்கள், நாடுகளை பற்றிய செய்திகள், அறிவியல் தொடர்பான விஷயங்கள், சுயமுன்னேற்ற நு£ல்கள், இன்னும் மருத்துவம், உடல் நலம் என்று புத்தகங்களின் உள்ளடக்கங்கள் மாறியிருக்கின்றன.இது தமிழ் வாசகர்கள் மத்தியில் கற்பனைகளை விட்டு புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியிருப்பதையே காட்டுகிறது. நன்று.

புதன், 22 ஜூலை, 2009

புதிதாக ஒரு வலைப்பதிவு

புதிதாக ஒரு வலைப்பதிவை உருவாக்கியதும் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. முன்பெல்லாம் நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு, எனக்கு பிடித்த நண்பர் அன்சாரியிடம் அதை து£க்கிச் செல்வேன். அவரிடம் படித்துக்காண்பிப்பேன். பெரிய எழுத்தாளன் போல எழுதியிருக்கிறாய் என்று பாராட்டுவார்.அப்போதெல்லாம் நிறைய எழுதினேன். இப்போது அது எதுவும் என் கைவசம் இல்லை. பள்ளிப்படிப்பு முடித்த நேரத்தில் பலருக்கு நடிகராக வேண்டும். இயக்குனராக வேண்டும் என்று கனவு வரும். அதன்பிறகு அவர்கள் கல்லு£ரிப்படிப்புக்கு போவார்கள். சிலர் படிக்க முடியாமல் வேலைக்கு போவார்கள். அதற்கு பிறகு திருமணம். மனைவி குழந்தைகள். பெண்களாக இருந்தால் கணவன் குழந்தைகள். இப்படியாக அவர்களது வாழ்க்கை ஒரு வளையத்திற்குள் சிக்கி இயக்குனர் கனவும் நடிகர் கனவும் சும்மா எப்போதாவது நினைத்துப்பார்க்கும் ஒன்றாகி விடும். அப்படித்தான் என் கதையும்.எனக்கு மட்டும் திருமணம் ஆகாதா என்ன-?இப்போது கொஞ்சம் நேரம் இருக்கிறது. வலைப்பதிவில் எழுதுவது சுலபமாகவும் சுகமாகவும் இருக்கிறது. இதை இப்படியே தொடரலாம் என்றிருக்கிறேன்.

என்னைப் பற்றி

எனது படம்
மனம் விட்டு சில விஷயங்களை பேசிக்கொள்ளத்தான் வேறென்ன